Monday, April 27, 2015

2. ஸ்லோகம் இரண்டு - சத்குருத்வம்


Companionship with the noble ones should be cultivated.
Communion with the Resplendent Lord should be firmly established.
One should discriminate with equanimous Mind.
With determination one should renounce actions (born of desire).
One should associate with noble men of Wisdom.
One should devotedly serve That One every day.
The one immutable Brahman should be the sole enterprise.
One should be receptive to the Supreme scriptural statements with equanimity.
_____________________________
 


ஆன்ம-ஆசை கொண்டவர் கூட-நட்பு கொண்டிரு
 பரமன்-பேரில் ஆசையை வளர்க்க-நீ முயன்றிடு
 மனதை-வென்று அசலன்-என்ற உயர்-நிலைக்கு முயன்றிடு
 புத்தி-சார்-வி..வேகத்தை உன்-துணையாய்க் கொண்டிடு
 வித்திலாதுனைப் படுத்த சத்குருவைத் தெரிந்தெடு
      சத்தியத்தின் உருவத்தை சத்குருவை வணங்கிடு
குருவின்-சொற்கள் குருவின்-செயல்கள் தன்னைக்கூர்ந்து பயன்பெறு
 குருவின்-பதம் கொண்டு-பரம பதத்தை-அடையும் நினைப்பொடு


2.1   ஆன்ம-ஆசை கொண்டவர் கூட-நட்பு கொண்டிரு




ஆன்ம-ஆசை கொண்டவர் கூட-நட்பு கொண்டிரு
ஊன-வாழ்வில் ஞானமே தீர்வு-என்று..ணர்ந்திடு
வீணர்-தன்னின் கூட்டினை விலக்கி-நீ செயல்படு
ஆனை-பலம் ஆன்ம-பலம் விருத்தியாகக் கண்டிடு
உத்த..மத்தின் நெஞ்சுரம் சத்தியத்தி..டத்-திறம்
கொண்டு-என்றும் நற்றடம் தனில்-நிலைக்கும் ஞானியை
கண்டு-சென்று வழிபடு தொண்டு-செய்து வாழ்ந்திடு
நன்று-நன்கு கேட்டிரு அவரின்-கூட்டில் இருந்திடு

உண்மை-தன்னைக் கண்டவர் தன்னைத்-தேடிச் சென்றிடு
அவரின்-உண்மைத் தன்மைஆ.. ராய்ந்து-நீ உணர்ந்திடு
தன்னைக்-கண்ட ஒருவரே உன்னைத்-தேற்றும் தகைமையைக்
கொள்ள-முடியும் என்பதை உணர்ந்து-அவரைத் தேர்ந்தெடு

கண்டிடாத பலர்-கலி தன்னில்-ஆசை காட்டுவர்
விண்டிடாத அவரிடம் யாதும்-உண்டு என்னுவர் 
உண்மை-என்ற இறைவனைக் கூடக்-குறைத்துப் பேசுவர்
தன்மையற்ற ஆணவம் தன்னில்-தன்னைப் போற்றுவர்

உனக்குக்-கதி காட்டுவேன் என்று ஆசை-மூட்டுவார்
தனக்கு-எனக்கு என்றிடும் அவரின்-சொல்லை மீறினால்
அந்த-கதி உனக்கிலை என்றும்-பயம் மூட்டுவார்
இவர்கள்-கவர்ச்சி பேச்சினில் ஞானம்-இல்லை அறிந்திடு

இவரின்-உண்மை தன்மையை அறிந்து-நீ பிழைத்திடு
ஞான-மார்க்க சத்குரு அவர்கள்-இல்லை உணர்ந்திடு
கண்ணிலாத ஒருவனா உனக்குப்-பாதை காட்டுவான்
கவர்ச்சி-கொண்ட பேச்சினால் ஞானப்-பாலா ஊட்டுவான்

உண்மை-தன்னை அறிந்திடும் ஆசை-கொண்டு உழைத்திடு
ஓரடி-நீ எடுத்திடு நூறடி-கொண்..டாண்டவன்
உன்னைத்-தேடி சத்குரு தன்னைத்-தானாய் அனுப்புவான்
அந்த-குரு வேறிலை கடவுள்-என்றே உணருவாய்
உண்மையான சத்குரு தன்னைக்-காணும் வரையில்-நீ
நன்மை-செய்யும் நல்மனம் கொண்டு-உன்னைப் போலவே
உள்ள-மாந்தர் தன்னுடன் சேர்க்கை-கொண்டு வாழுவாய்
எள்ளளவும் தீயவர் சேர்க்கை-தன்னைக் கொண்டிடாய்


2.2   பரமன்-பேரில் ஆசையை வளர்க்க-நீ முயன்றிடு


பரமன்-மீதில் கொண்ட-ஆசை பக்தி-என்றே ஆகுது
விரைவில்-அந்த ஆசை-மற்ற ஆசை-தன்னைக் கொல்லுது
பரமபதம் என்று-மேலோர் அழைக்கும்-இறைவன் திருவடி
கிடைக்க-பக்தி என்னும்-வழி போல-ஒன்று வேறெது

மனிதன்-மனது என்பது *புதிதும்-புதிரும் ஆனது
மனதில்-ஒன்றை நினைத்திட மனிதன்-அதுவாய் ஆவது
**என்பதுப நிஷதத்தின் கூற்றுமாகித் திகழுது
அதனின்படிப் பரமனை நினைக்கப்-ப்ரம்மம் ஆகுது

*மனம் எண்ணங்களின் உருவகமே. புதுப்புது எண்ணங்கள் கணமும் தோன்றி மனதைப் புதிதாகவும் புதிராகவும் இருக்கச் செய்கிறது

* மைத்ரிய உபநிஷத் (V I.43)- மனமே சம்சார சாகரம் என்கிறது.

தொலைவில் உள்ள பொருளையும் அருகிருத்தும் நினைப்புடன்
அலையும்-மனத்தில் கணந்தோறும் பரமன்-நினைப்பை நிறுத்திட
விலையிலா-உ பாயமாய் நல்லோர்-உறவு தன்னையே
கொள்ளவேண்டும் என்று-நம் சங்கரரும் புகல்கிறார்

***தீய-எண்ணம் கொண்டவர் உண்மை-மேன்மை அறிகிலார்
பாயும்-மனதில் கணந்தொறும் தன்னை-மட்டும் எண்ணியே
தீயுமாகும் சுயநலச் சூட்டில்-வெந்து மடிகிறார்
ஆயிரத்தின் பிறப்பிலும் இவர்கள்-தன்னை உணர்ந்திடார்
***( ரிக் வேதம் .IX.73.6). கதோபநிஷத் (I.2.24)

 பரமனடியைக் கண்டிட அதனைக்-கண்ட தூயவர்
ஒருவர்தன்னைத் தேடியே கொள்ள-நீயும் முயலணும்
அருவமான இறைவனைக் கண்ட-குருவை எப்படி
அறிவதென்று நீயுமே அறியும்-திறமை தேடணும்

பரம-குருவின் லக்ஷணம் தன்னை-உணர்தல் சிரமமாம்
அவரின்-நினைப்பு முழுவது பிறரின்-நலனில் இருக்குமாம்
பிறரில்-அந்தப் பரமனை காணும்-முதிர்வு மிளிருமாம்
அவரின்-எளிமை ஒன்றுதான் அவரைக்-காட்டிக் கொடுக்குமாம்

அவர்கள்-மாயக் கடலினைக் கடந்து-நின்றி...ருப்பதால்
அவர்க்கு-பிறர்க்கு கதியினைச் காட்டும்-தகுதி இருக்குமாம்
அர்த்தமற்றக் கவர்ச்சியும் வெற்றுப்-பேச்சுப் புகழ்ச்சியும்
வ்யர்த்தமென்று அவர்பதம் தன்னின்-தூளி உணர்த்துமாம்

உலகமாந்தர் நன்-நலம் தன்னில்-கொண்ட அக்கறை
நிலவுகின்ற உள்ளமே கொண்ட-அவரின் பெருநிலை
தன்னை-பிறர்க்கு ஊட்டியே அவரின்-இதயக் கூட்டிலே
சிறையில்-வாடிச் சிலையென உறையில்-மறையும் வாளென

உறையும்-ஆன்மம் விழித்திட இறையின்-கீதம் மீட்டியே
நிறைவைத்-தரும் சத்குரு மனிதனல்ல இறைவனே..!


2.3  மனதை-வென்று  அசலன்-என்ற உயர்-நிலைக்கு முயன்றிடு


 மனதை-வென்று *அசலன்-என்ற உயர்-நிலைக்கு முயன்றிடு
நகலை-வென்று **அசபை-சென்று அசலைக்-கண்டு உயர்ந்திடு
**சவலை-என்று அழுது-அழுது அன்னை-தாளை சுற்றிடு
***சிவனை-அன்றி எவனுமில்லை எனும்-நிலைக்..குயர்ந்திடு

 *அசலன்= அசலம்(மலை)போன்று அசையாத நிலை கொண்டவன் (ஸ்தித ப்ரக்ஞன்)
**அசபை-யோகங் கொள்ளுங்கால் கேட்கும் நுண்ணிய தெய்வீக ஒலி. அதையும் கடந்து அசலான இறைவனை அடைய வேண்டும்.


**சவலை=சவலைக் குழந்தை தாய்க்கு ஏங்கி ஏங்கி அழுது அழுது அவள் காலடியிலேயே தவமிருப்பது போல் சாதகன் இறை அன்னையை விடாமல் தொந்தரவு செய்ய வேண்டும். அந்த தொந்தரவு ஒன்றுக்கு மட்டுமே ஏங்கித் தவம் கிடக்கும் இறைவனை என்ன சொல்ல !!!
 ***எங்கும் எதிலும் சிவனை (இறைவனை) அன்றி வேறிலை என்றும் சம திருஷ்டி கொள்ளலே சமாதிப் பெருநிலை

மயக்கம் தீர்க்கும் கீதையும் பயப்படாதே என்குது 
மயக்கும் கலக்கும் மாயத்துக்கே பயப்படாதே என்குது
இழையும் குழையும் இன்பத்துக்கே வயப்படாதே என்குது
சுத்தசத்வ ஸ்திரப்-பி.. ரக்ஞை என்னவென்றிட்..டால்-அது
 
இன்பதுன்பம் இரண்டும்-ஒன்று என்பதாக இருப்பது
நண்பர்-பகைவர் என்றிலாத அனைத்தின் ப்ரம்மம் உணர்வது
*வேதக்-கதை உபநிடதம் உடலைத்-தேரு என்குது
புத்தி-என்ற சாரதி மனது-என்ற கயிறினைப்
பூட்டிப்-புலனின் குதிரையைச் செலுத்தல்-யோகம் என்குது
இதைத்தான் கருமப் பாதையாய் கீதபோதம் சொல்லுது
*Katha Upanishad (I.iii.3)
இதனை-இரண்டு போதனை தன்னில்-சுருக்கி அடக்கியே 
அன்பை-உதட்டில் கொண்டிரு சேவை-தன்னைக் கை-எடு 
என்று-சொன்ன உண்மையைக் கண்டு-நாமும் இம்மையில்  
கொள்ளவேண்டும் மேன்மையை வெல்ல-வேண்டும் பிறவியை

ஆசைகொன்று சேவை-தன்னை பூசை-என்று கொண்டிடு 
அந்த-சேவை தன்னை-அன்பு கொண்டு-நீயும் புரிவது
அதனில்-தோன்றும் பலனில்-ஆசை கொள்தல்-தன்னை விலக்குது
இந்த-உண்மை அந்த-உண்மை சொன்ன-கீதை உண்மையாம்
 
இறையை-அறியப் பயன்படும் பக்தி-மார்க்கம் தன்னையே
பக்தி-சூத்ரம் காட்டுது சித்திப்-பாதை காட்டுது
அதனில்-பக்தி என்னது என்ற-விளக்கம் விளங்குது
அதனை-விளக்கல் கடியது அதனை-விளங்கல் இனியது
 
இறைவன்-மீதில் பித்துதான் பக்தி-என்று ஆகுது
இரவும்-பகலும் நினைப்பில்-*நான் ஒன்றுதானே இருக்குது 
இரையைக் காண தவமிரும் கொக்கின்-மதி போன்றது
கரைந்து-மெய்யும் மறைவுற தனை-மறந்த நிலையது
*நான் - உண்மையான தன்னுணர்வு - ஆன்ம உணர்வு
 

2.4   புத்தி-சார்-வி..வேகத்தை உன்-துணையாய்க் கொண்டிடு

 புத்தி-சார்-வி..வேகத்தை உன்-துணையாய்க் கொண்டிடு
வைரம்போல்-ஆ.. காத்தியம் ஆனநல்-வை ராக்கியம்
தன்னிலே நிலைத்திடு உண்மையே நினைத்திடு
இவைகள்-கொண்டு ஆசையின் ஆட்டம்தன்னைப் போக்கிடு  

ஆசைதன்னைக் களைய-நல்ல ஆசை-ஒன்றைத் தெரிந்தெடு
அந்த-ஆசை பரமன்-பேரில் கொள்வதென்று புரிந்திடு
 அந்த-ஆசை கொண்டு-அன்பு சேவை-தன்னைச் செய்திரு
கீதை-கூட இதனை-நல்ல கருமம்-என்றே சொல்லுது

மனது-இரண்டு வகையில்-விளங்கும் புதினமான-புனிதமாம்
ஒன்று-பற்று கொண்டு-ஆசை தன்னில்-கிடந்தது உழலுமாம்
தன்னைக்-கடந்து சித்தம்-என்ற நிலையில்-ஒன்று விளங்குமாம்
தூய-சித்தில் விளங்கும்-யாவும் உண்மையான பொருளுமாம்

சித்தில்-அமைந்த சித்தர்-வாக்கு புதிருமாக-விளங்குமாம்
தூய்மை-கொண்ட சுத்த-சித்தம் அடைய-அதுவும் விளங்குமாம்
அதுவே-சுத்த சத்துவத்தின் நிலைமை-என்று விளங்குமாம்
அதனின்-தன்மை உண்மை-விளங்கும் நன்மை-தன்னை நுகர்வதாம்
அதனில்-நிலைத்த *சோக்கிரதர் சொன்ன-வாக்கு ஒன்றுமாம் 
அறிந்து-கொண்டேன் அறியவில்லை என்ற-உண்மை நன்றுமாய்

*Socrates said once (சுத்த சத்வ நிலை) that 'I know that I know not', he was responding from his conscious awareness of his spiritual mind (supra consciousness)


மனதின்-இயல்பு ஏதாகிலும் ஒன்றைப் பற்றி-அலைவதாம்
ஆதலினால் அதனைப்-பற்றி அறிந்து-கொள்ளல் வேணுமாம்
அதனின்-போக்கில் விடுதல்-போல அதற்கு-போக்கு காட்டுவாய்
அதற்கு-ஆசை கொள்ளச்-சொல்லி ஆசை-தன்னை மூட்டுவாய்

அந்த-ஆசை என்ன-வென்று நினைக்கும்-ஆற்றல்-உனக்குமாய்
கொண்டு-ஆசை தன்னை-பரமன் மீது-கொள்ளச் சொல்லுவாய்
முதலில்-உந்தன் ஆளுகைக்கு அதுவும்-படிய மறுக்குமாம்
திரும்பத்-திரும்ப தற்கு-ஆசை மூட்ட-அதுவும் அடங்குமாம்

ஆசை-கொள்ளல் மனதின்-இயல்பு என்று-ஆன..தாதலால்
ஆசைப்-பாதை தன்னில்-அதுவும் செல்லும்-வேக வேகமாய்
அந்த-ஆசை கோபியர்கள் கொண்ட-கண்ணன் ஆசைபோல்
பந்தமில்லை மாயமில்லை பிறகு-யாவும் ஞானமே

வார்த்தையினால் விளங்கிடாத துரிய-நிலை அந்நிலை
பேச்சினாலே புரிபடாத பைத்தியத்தின் பெருநிலை
மூச்சிலாமல் உயிர்-நடத்தும் சித்-விலாசத்..தின்-நிலை
ஏச்சுக்கஞ்சி..டாதிருக்கும் கோபியரின் உயர்-நிலை

முக்தி-தரும் உண்மை-பக்தி என்னவென்று சொல்லிட
பக்தி-சூத்ரம் கூட-கோபி மங்கையரைக் காட்டுது
எதுவும்-அவன் எதிலும்-அவன் என்று-அவர்கள் கண்ணனை
மனதில்-கொண்டு அவனில்-கரைந்து விடுதல்-ஒன்றே பக்தியாம்
 

2.5   வித்திலாது..னைப்-படுத்த சத்குருவைத் தெரிந்தெடு   

வித்திலாதுனைப் படுத்த சத்குருவைத் தெரிந்தெடு
கத்தி-போல புத்தி-கூர்மை கொண்ட-ஞானப் பார்வையும் 
சுத்தி-போல சத்தின்-ஆணி உள்ளிரக்கும் தீர்மையும்
சத்தியத்தி..லே-நிலைத்து அதனைக் காட்டும் நேர்மையும்
நித்தியத்து..னைபடுத்து கின்ற-தானத் திறமையும்
 கொண்டதான ஒருவர்-தன்னை சத்குருவாய் அடைந்திடு
பிறரைக்-காண உனக்கு-கண்கள் உதவும்-எனினும் உன்னை-நீ 
காண-வேண்டும் பளிங்கு-போல விளங்குமோர்-கண்..ணாடி-போல்
உன்னைக்-காண உதவத்-தன்னைக் கண்ட-ஒருவர் வேண்டுமே
உன்னைத்-தகுந்த பாதை-காட்டி இட்டுச்-செல்லும் குருவுமாய்
ஆதி-சங்க..ரர்-தரும் குருவின்-லக்ஷ..ணம்-இதோ..!
பிறருக்காக வாழுவார் அவருக்கென்றால் நாணுவார்
(உன்) வரவுக்காக ஏங்குவார் உண்மைப்-பாலை ஊட்டுவார் 
ஆசை-விட்ட யோகியாம் அமைதி-கண்ட ஞானியாம்
“என்னை”-இன்றி எரியும்-ஞானத் தீயைக்-கொண்டு விளங்குவார்
நல்லோர்-அவரின் நண்பராம் அவரில்-எளிமை துலங்குமாம்
*விதியை-மாற்றி கதியை-அளிக்க அவரின்-சொல்லும் ஒலிக்குமாம்
*கதி தர வாஞ்சையுடன் அழைக்கும் அவர் சொல்லில் கதியிலை எனும் அமங்கலம் எந்நாளும் விளங்காது. 
Sadhguru is one who is full of positive vibration.He gives you abundant confidence. He is one whose life will be an example of this.
“என்னை”இன்றி -தன்னலம் இன்றி


நசிகேதன் என்ற-சிறுவன் சொன்னதாகச் சொல்வது
உபநிடதம் தன்னில்-வரும் இதனை-நினைத்தல் பொருந்துது
ஐயே..ஐயோ..! என்னை-யறிதல் எனக்கு-மிகவும் அரியது
விதியைக்-கணிக்கும் யமனே-உனக்கு தருமம்-என்றும் உரியது  
எனவே-எனக்கு குருவே-நீயும் உண்மை-தன்னை உரைக்கணும்
அதுவே-எனக்கு இறைவா-நீயும் கொடுக்கலாகும் நல்-வரம்
தருமத்திரு உருவகமாம் யமனை-இறைவன் என்பது 
மிகையுமல்ல தவறுமல்ல சிறுவன்-அறிவு பெரியது 
 குருவுமாக விளங்க-ஒருவர் வேண்டும்-தகைமை பெரியது 
அருவமாக விளங்கும்-இறைவன் உருவம்-குருவும் ஆகுது

2.6   சத்தியத்தின் உருவம்-தன்னை சத்குருவாய் வணங்கிடு



சத்தியத்தின் உருவம்-தன்னை சத்குருவாய் வணங்கிடு 
*வித்திசையை மூச்சிசைக்கும் அவரைத்-தொழுது அழுதிடு 
எத்திசையும் புகழ்-மணக்கும் அவர்க்குச்-சேவை புரிந்திடு
**மத்தசைக்கும் தேவர்-பணியும் அவரைப்-பணிந்து உயர்ந்திடு
*வித்திசை-அனைத்துக்கும் வித்தான இசை – ப்ரணவம்
அதுவே தன் ஸ்வாசக் காற்றாய் ஒலிக்கக் கொண்டவர் சத்குரு/இறைவன்
**மந்தர மலை மத்தசைத்து அமுதம் எடுக்க/எடுத்த தேவர்கள் பணியும் சிவனை (தக்ஷிணா மூர்த்தியை-தருமூர்த்த சத்குருவை) , கண்ணனை (கீதாச்சார்ய கோவிந்தனை) குருவாக எண்ணிப் பணிந்திடு. இறைவன் வடிவே சத்குரு என்பதே துணிபு.

2.7   குருவின்-சொற்கள் குருவின்-செயல்கள் தன்னைக்-கூர்ந்து பயன்-பெறு


குருவின்-சொற்கள் குருவின்-செயல்கள் தன்னைக்கூர்ந்து பயன்பெறு
கேட்கக்-காண மட்டுமல்ல வாழ்வில்-நடக்க முயன்றிடு
சிவனின்-ரூபம் கொண்ட-சக்தி அவரின்-வாழ்வு போதனை 
தன்னை-உணர்ந்து செயலில்-கொள்ள தீரும்-பிறவி-வேதனை 
என்ற-உண்மை உணர-தாகம் தந்த-வேகம் கொண்ட-நல்
*சீடனாகச்-செய்தெழுவாய் சேவை-அன்றிப் பயனிலை
உண்மையான சீடனாக எப்படிச் செயல் படவேண்டும் / கூடாது என விளக்கும் இந்த வரிக்கு. கீழ்கண்ட மூன்று விளக்கங்கள் உள்ளன.
Interpretation :1
*நல் *சீடனாகச்-செய்தெழுவாய் சேவை-அன்றிப் பயனிலை :
உணமையான நல்ல சீடனாய் குருவின் வாழ்வே செய்தி என்றுணர்ந்து அதை நடைமுறையில் கொண்டு வந்து குரு மற்றும் லோக சேவையில் ஈடுபட்டு வாழ்தல் அன்றிக் கேட்டலில் பயனில்லை
Interpretation :2
*நல் *சீடனாகச்-செய்தெழு வாய் சேவை-அன்றிப் பயனிலை
*நல் *சீடனாகச்-செய்தெழு – உணமையான நல்ல சீடனாய் குருவின் வாழ்வே செய்தி என்றுணர்ந்து அதை நடைமுறையில் கொண்டு வந்து செயல் படு.
வாய் சேவை+அன்று+இப்பயன்+இல்லை : புகழ்ச்சி சொற்களால் +இப்பிறவி முடிந்து அடுத்து என்ன என்று நிற்கும் மறுமைப் பேறுக்கு நிற்கும் நாளில்+வெற்றுப் புகழ்சித் தோத்திரத்தால் பூவுலகில் கிடைக்கும் இப்பயன் (transcient) + இல்லை
Interpretation :3
தமிழ் இலக்கணப்படி ஒரு செயலை செய்யும் பொருள் எழுவாயென்றும், செயலைச் சொல்லும் வினைமுற்று பயனிலையென்றும், எழுவாயினால் செய்யப்படுகின்ற பொருளே செயபடுபொருள் என்றும் வழங்கப்படும்.
" ஸ்ரீதரன் புத்தகத்தைப் படித்தான்", இச்சொற்டொரரில்;
ஸ்ரீதரன் – எழுவாய் , படித்தான் – பயனிலை, புத்தகத்தை –செயபடுபொருள்
இதன்படி,
சீடனாகச்-செய்தெழுவாய் சேவை-அன்றிப் பயனிலை –
என்பதில் சீடன்-எழுவாய், புரிவது-பயனிலை சேவை – செயபடுபொருள்
இவ்வாறு ஸ்ரத்தையாக குருவின் உபதேசப்படி ஒரு சீடன் செய்தொழுகுங்கால் , இந்த சேவை புரிதல் என்பது
அன்றி பயனிலை  =அன்று+இப்பயனிலை
அன்று (மறுமையில்) , இப்பயனிலை ஆகிறது - உண்மையான வினைமுற்று என்னும் இப்பயனிலை ஆகிறது.
 
குருவின்-பதம் கொண்டு-பரம பதத்தை-அடையும் நினைப்பொடு
 அருவில்-இரும் பரமன்-தனை உருவில்-முதலில் வழிபடு
 உறவில்-அவன் உனது-என்ற உண்மை-தன்னின் நினைப்பொடு
 விரைவில்-தோன்றும் இறைவன்-காட்சி தன்னை-எண்ணி வாழ்ந்திரு
 

2.8   ஞானம்-தன்னை ஏற்க-நல்ல பாத்திரமாய் மாறிடு


ஞானம்-தன்னை ஏற்க-நல்ல பாத்திரமாய் மாறிடு 
வேதம்-கூறும் உண்மை-தன்னின் உண்மை-தன்னை நம்பிடு
மகரிஷிகள் உலகம்-தந்த வேதம்-அவர்க்கு உண்மையை
நிஜவுருவாய் காட்டியதால் அதை-நமக்கு அன்புடன் 
அளித்திடவே கருணை-கொண்டார் அவர்கள்பரமம் தன்னைக்கண்டார்
ஞானம்-ஏற்கும் பாத்திரமா ? என்னதது என்றொரு
சின்ன-கேள்வி சீடன்-மனதில் தோன்றித்-தானே மயக்குது
தூய-நீரே சிப்பிக்குள்ளே முத்துமாகி ஜொலிக்குது
என்றிட்டாலும் அதற்கு-பல விதி-முறைகள் இருக்குது

அதனைப்-போலே முத்தைத்-தாங்கும் தகுதி-நீயும் வளர்க்கணும்
ஞானம்-விளங்க உனது-சித்தம் நிர்மலமாய் ஆகணும் 
உனக்கு-என்று ஒன்று-இல்லை என்ற-நிலையைக் கொண்டிடு
முனிகள்-சொன்ன வேதக்-கருத்தை ஐயுறாமல் ஏற்றிடு
பிறகு-உனது பாரம்-நிறையக் குறைய-நீயும் உணர்ந்திடு
சிறகு-முளைத்த பறவை-போல மனதின்-வானில் பறந்திடு


Prev    First  Next
_________________


 

No comments:

Post a Comment